டிச. 22-இல் மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் 


பெங்களூரு, டிச. 14: பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிலரங்கம் டிச.22-ஆம் தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து, ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

தேசிய கணிதத் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கத் தில் டிசம்பர் 22-ஆம்தேதி மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடை பெற இருக்கிறது. கலையையும் கணிதத்தையும் இணைத்து கணிதம் போதிக்கும் இப் பயிலரங்கம் இணையவழியில் நடைபெற இருக்கிறது. இந்தப் பயில ரங்கத்தில் பங்கேற்க ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்பதால் முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளம் வழியாக டிச.19-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.taralaya.org என்ற இணையதளம் அல்லது 080-22379725, 22266084 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!