புரெவி புயல் பாதிப்பு: 6 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை:ஆணை வெளியிடப்படுகிறது
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
“வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "புரெவி புயல்" இன்று (3.12.2020), மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இப்புயல், 4.12.2020 அன்று அதிகாலையில் பாம்பன் -கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு புயல் கரையை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
- கன்னியாகுமரி,
- திருநெல்வேலி,
- தென்காசி,
- இராமநாதபுரம்,
- விருதுநகர் மற்றும்
- துhத்துக்குடி
ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (4.12.2020) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதற்கு ஈடாக 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும்.
மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment