சட்டப்படிப்புகளுக்கான முதல் செமஸ்டருன் அரியர் தேர்வு ஐகோர்ட்டில் பல்கலை. தகவல் 


சென்னை, டிச. 19: 

சட்ட படிப் புகளுக்கு ஜனவரி 6ம் தேதி முதல் பருவத் தேர்வுகளோடு சேர்த்து அரியர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப் படும் என்று டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வு களை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து, சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிட கோரி சஞ்சய் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

 இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ஜனவரி 6ம் தேதி சட்டப்படிப் பிற்கான முதல் பருவத்தேர்வு நடைபெறவுள்ளது. 

அந்த தேர் வுகளோடு சேர்த்து அரிய தேர் வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அதற் கான அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் தள்ளி வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!