தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (தமிழக அரசு நிறுவனம்) நேரடி நியமன அறிவிக்கை 


SIPCOT தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (தமிழக அரசு நிறுவனம்) 19-ஏ, ருக்மணி இலட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை-600 008 

நேரடி நியமன அறிவிக்கை 

அறிவிக்கை எண் 06 / 2020 
நாள்: 15.12.2020 

தமிழக அரசு நிறுவனமான தமிழ் நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில், உதவி பொது மேலாளர் (நிதி) பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக 16.12.2020 தேதியிலிருந்து 29.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன. 

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயரை பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும் மேற்படி பணிகளுக்கு இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். 

காலிப்பணியிடங்களின் விவரங்கள் பின் வருமாறு: 

பதவியின் பெயர் : உதவி பொது மேலாளர் (நிதி) பணிக் காலியிட எண்ணிக்கை 1 (ஒன்று) இன சுழற்சி பிரிவு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் சம்பள ஏற்ற முறை |Level 27 Rs.62200 - 197200 கல்வித் தகுதி பட்டயக் கணக்காளராக தகுதி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் ஐ.சி. ஏ. ஐ-யில் இணை / சக உறுப்பினராக இருக்க வேண்டும். அனுபவம் மேற்கூறிய படிப்பு முடித்த பிறகு வங்கி /நிதி நிறுவனம் / பிரசித்தி பெற்ற தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பட்டயக் கணக்காளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 

அதிகபட்ச வயது -45 வயது குறிப்பு - மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வித் தகுதிகள் அனைத்தும் 10 ஆம் வகுப்பு / | மேல்நிலை கல்வித் தகுதி / இளங்கலைப் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்தோ அல்லது கல்வி நிறுவனத்திலிருந்தோ பெறப்பட்டதாக இருக்கவேண்டும் / பட்டயக் கணக்காளர் மேலும் ஐ.சி.ஏ.ஐ-யில் இணை/ சக உறுப்பினராக இருக்கவேண்டும். 

விண்ணப்பிப்பது எப்படி? என்பது பற்றியும், பொதுத் தகவல், தகுதிக்கான அளவுகோல் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை, தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறை மற்றும் இதர விவரங்கள் www.sipcot.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். 

மேலாண்மை இயக்குநர்

நாள் : 15.12.2020
சென்னை - 8

Post a Comment

Previous Post Next Post

Search here!