வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் - EDUNTZ

Latest

Search here!

Tuesday 8 December 2020

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்



வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 ‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம். புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment