தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் இணைய வழியில் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக நடப்பு பருவத்தேர்வு இன்று (டிச.21) தொடங்கி ஜனவரி 6-ம் தேதி வரை இணைய வழியில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுடன் அரியர் மாணவர்கள் மற்றும் கூடுதல் மதிப்பெண்ணுக்கான முன்னேற்றத் தேர்வும் நடத்தப்படஉள்ளது.
இந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பல்கலை. இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment