அரசு ஒதுக்கீடு MBBS, BDS கலந்தாய்வு நாளையுடன் நிறைவு 


நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஓரிரு நாளில் தொடக்கம் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நாளையுடன் நிறைவடைகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கவுள்ளது. 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த நவ. 18-ம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 23-ம்தேதி தொடங்கியது. டிச.4-ம் தேதிவரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நிவர்’ புயலால் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற இருந்த கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது. இதை யடுத்து, தள்ளிவைக்கப்பட்ட பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நவ.30-ம் தேதி தொடங்கியது. 

இந்த கலந்தாய்வு டிச.10-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து 11 மற்றும் 12-ம் தேதிகளில் எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. எஸ்சி (அருந்ததியர்) மற்றும் எஸ்டி பிரிவினருக்கான கலந்தாய்வு நாளைநடைபெறவுள்ளது. அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்களுக்கான கலந்தாய்வுநாளையுடன் நிறைவடையஉள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!