முடிவு
நடப்பு கல்வியாண்டுக்கானவகுப்புகள் ஆன்லைனில்நடந்து வருகின்றன. இளநிலை,முதுநிலை இறுதியாண்டு பயிலும்மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு பருவத்துக்கான நவம்பர், டிசம்பர் தேர்வுஅட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்து, அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் கோரியிருந்தன. அதன்படி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்படிஅரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள்நடத்தப்படுகின்றன. இதைக்கருத்தில் கொண்டு அனைத்துபருவத் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். அதற்கானகால அட்டவணையை அந்தந்தபல்கலை.கள் வெளியிடும். அதேநேரம் இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு கல்லூரிகளிலேயே நேரடியாக நடைபெறும்’’ என்றனர்.
No comments:
Post a Comment