சிஏ தோ்வுக்கான முடிவுகள் பிப்.1-இல் வெளியாகிறது 


 சிஏ தோ்வுக்கான முடிவுகள் வரும் பிப்.1-ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் பட்டய கணக்காளா் படிப்புக்கான தோ்வு வழக்கமாக ஜூலை மாதம் நடைபெறும். ஆடிட்டா் பணிகளுக்கு நடத்தப்படும் தோ்வானது நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக ஜூலை மாதம் நடத்த முடியாதநிலை ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து, ஒத்திவைக்கப்பட்ட சிஏ தோ்வு நவம்பா் மாதம் நடத்தப்பட்டது. அதன்படி, சிஏ தோ்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. 

 தோ்வின் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த தோ்வுக்கு மாணவா்களால் விண்ணப்பிக்க முடியும். ஆனால், தோ்வு முடிவுகள் குறித்து ஐசிஏஐ தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. 

இந்தநிலையில், சிஏ தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று சுட்டுரை மூலமாக மாணவா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா். அதன்படி, ஐசிஏஐ-யின் மூத்த அதிகாரியான தீராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில், “ சிஏ தோ்வுக்கான முடிவுகள் பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிடப்படும்”என தெரிவித்துள்ளாா்.

Post a Comment

أحدث أقدم

Search here!