திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு விண்ணப்பிக்க 2-ந் தேதி கடைசி நாள் 


 திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விண்ணப்பிப்பதற்கு வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். ஆன்லைன் பயிற்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. குரூப்-2 தேர்வு எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதியில் இருந்து வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரையிலும் நாள்தோறும் 3 மணி நேரம் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்த உள்ளது. இந்த பயிற்சி, தமிழ் மொழி வாயிலாக வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும் 2-ந் தேதி கடைசிநாள் பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் புகைப்படம் ஒட்டி, பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் ஆகியவற்றை எழுதி, அத்துடன் ரூ.8 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை (கனரா வங்கி, இ்ந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி) ‘சிவந்தி அகாடமி திருச்செந்தூர்’ என்ற பெயரில் எடுத்து, ‘சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம்’ என்ற முகவரிக்கு வருகிற 2-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 94420 55243, 86829 85148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!