கோபம் கொள்வதில் தவறில்லை. சரியான இடம் பார்த்து சரியான நபரிடம்
சரியான காரணத்துக்காக சரியான அளவுக்கு
கோபத்தைக் காட்ட வேண்டும் என்பார் அரிஸ்டாட்டில்.
நம் கட்டுப்பாட்டை மீறிய கோபத்தை விட நமது
கட்டுக்குள் கோபத்தை வைத்து சீறுவது சரியான
அணுகுமுறையாக இருக்கும். சீறினால்தான் பாம்பு
இல்லாவிட்டால் அது புழு.
பெண்களுக்கு பணியிடங்களில் பல்வேறு சந்தர்ப்
பங்கள் கோபத்தைத் தூண்டுகின்றன.
ஆண்களின்
வெறித்தனமான பார்வைகள், சீண்டல்கள்,
தொடுதல்கள், அவசியமில்லாத கைகுலுக்கல்கள்,
பெண் என்று இளக்காரமாக பேசுவது, எப்போதும்
குறை கூறுவது என்று ஆண்களின் அத்தனை
அட்டுழியங்களையும் சகித்துக் கொண்டு ஒரு
பெண்ணால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?
பெண்களை சகோதரிகளாகவும், நல்ல தோழிய
ராகவும் மதிக்கும் ஆண்களிடம் அவளுக்கு கோபம்
வருவதில்லை. குழந்தைகள், நாய், பூனை போன்ற
செல்லப்பிராணிகள், பெண்களிடம் அவள்
மாறாத அன்பு கொண்டவளாகத்தான் இருக்கிறாள்.
வேலையும் பணிச்சுமையும் பெண்கள்
பொறுமையிழக்க காரணமாக இருந்தாலும்
மனத்தில் தன்னை ஒரு போகப்பொருளாகவும்,
இரண்டாம் தர நபராகவும், திறன் அற்றவளாகவும்
ஒருவர்
எடை போடும் போது அதை பெண்ணால்
பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. பணியிடத்
தில் கோபம் என்பது “திமிர் பிடித்தவள்” என்ற
பட்டத்தையும் வாங்கி கொடுக்கும்.
ஒரு பெண் தனது கோபத்தை பணியிடத்தி
காட்டும் போது அது தன்னை தற்காத்த
கொள்வதற்கும், தன்மானத்தை உயர்த்திப் பிடிய
தற்காகவும் இருந்தால் அதில் தவறில்லை. சி
நேரங்களில் பெண்கள் பொறாமையால் ஆட்ட
படைக்கப்படுவார்கள். அப்போது வரும் கோட
அவர்களது உடல் நலம், மனநலம் இரண்டைய
பாதித்து விடும்.
நியாயமான
கோபத்தை வெளிப்படுத்தாம
உள்ளுக்குள்ளேயே புதைத்து வைப்பதாலேய
நமக்கு அதிக தீங்குகள் ஏற்படுகின்றன. அப்ப
யென்றால் என்ன தான் செய்வது? நமது கோபத்
சரியான வகையில் கையாள்வது தான் நன்மை தரு
ஒரே தீர்வு.
கோபத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்
சில டிப்ஸ்:
1 பேசுவதற்கு முன் யோசியுங்கள்.
கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள்.
2 சிறி
நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.
3 உங்களை கோபப்படுத்தியவற்றில்
செலுத்துவதற்குப் பதிலாக, சிக்கலைத் தீர்ப்பதி
மூளையை செலுத்துங்கள்.
4 உங்கள் ஆதங்கத்தை பிரச்சினைக்கு சம்பந்த
இல்லாத
ஒரு நண்பரிடம் கொட்டி தீர்த்
கொள்ளுங்கள்.
5 ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களை
பயிற்சி செய்யுங்கள்
6 எந்த ஒரு கோபத்திலும் நியாயம் இரு
வேண்டும் என்பதே நியதி.
கவன்
Post a Comment