ஆன்லைன் வகுப்பு - கவிதை  


எப்பொழுதும் தோன்றி மறைகின்ற நாட்கள் 
 இப்பொழுது தோன்றாமலே மறைகின்றன.. 
 அனைத்தையும் வகுப்பில் பகிறும் விழிகள் 
 ஆன்லைன் வகுப்பில் ஒரு பெட்டிக்குப்பின்னால்..
 என் தோளில் கைபோட்டு பேசும் தோழியை 
 தொடுதிரையில் நான் எங்கு தேடுவேன்? 
 கல்லூரியில் கரம்பற்றி விளையாடும் 
தோழியை வீட்டிற்குள் எங்குபோய் காண்பேன்? 
 எனக்கு அரணாக இருந்த தோழிகளை 
 தொலைபேசியில் காணாது தேடுகிறேன் 
 எப்பொழுதும் என் முகம் பார்த்து மலரும் முகங்கள் 
 இப்பொழுது என் முன் தோன்றாமலே மறைகின்றன 
 இந்த தொடுதிரைக்குப் பின்னால்.. 

 சி.லதா, 
 இரண்டாம் ஆண்டு, 
வேதியியல் பிரிவு 
 எஸ்.டி.என்.பி. 
வைஷ்ணவ் கல்லூரி, குரோம்பேட்டை.

Post a Comment

Previous Post Next Post

Search here!