World Thirukkural Conference on February 26th - EDUNTZ

Latest

Search here!

Wednesday 20 January 2021

World Thirukkural Conference on February 26th

World Thirukkural Conference on February 26th 
பிப்ரவரி 26ல் உலக திருக்குறள் மாநாடு 



 சென்னை:உலக திருக்குறள் மூன்றாவது மாநாடு, பிப்., 26ல், தஞ்சையில் துவங்க உள்ளது. தமிழக அரசின் உலக தமிழாராய்ச்சி நிறுவனம், ஆஸ்திரேலியாவின், மெல்பர்ன் தமிழ் சங்கம், இளங்காடு நற்றமிழ் சங்கம், தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து, இரண்டு ஆண்டுகளாக, உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. இந்த மாநாட்டில், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழறிஞர்கள் என, பல்துறை வல்லுனர்கள், திருக்குறள் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பர். மேலும், தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் திருக்குறள் நெறி பரப்புவோருக்கு, மாநாட்டில் சிறப்பு விருதுகள் வழங்கப் படும். மாணவர்கள், குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டு, பிப்., 26ல், தஞ்சை பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லுாரி; 27ல், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லுாரி; 28ல், அரண்மனைத்திடலின் திறந்தவெளி அரங்கம் ஆகியவற்றில், மூன்று நாட்கள் மாநாடு நடக்க உள்ளது.இதற்கு, கட்டுரைகள் வழங்க விரும்புவோர், kuralmanadu21tnj@gmail.com, thamilthaitrust@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

No comments:

Post a Comment