குரூப்-1 தேர்வு: சன் ஐ ஏ எஸ் அகாடமி பயிற்சி
சென்னை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி)
கடந்த ஜன.3-ம் தேதி முதல்நிலைத் தேர்வை நடத்தியது. இத்தேர்வின்
முடிவுகள் பிப்.9-ம் தேதி வெளியானது. இதில் 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வை வரும்
மே 28, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் எழுதவுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முதன்மைத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு
உதவும் வகையில் சன் ஐஏஎஸ் அகாடமி சார்பில் இலவச சிறப்பு
பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
ஐஆர்எஸ் அதிகாரி நந்தகுமார்
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார். தேர்வு குறித்த
சந்தேகங்கள், தேர்வை எதிர்கொள்ளும் யுக்திகள், விடைகளை
சிறந்த முறையில் எழுதுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் சன் ஐஏஎஸ் அகாடமியில் குருப்-1 முதன்மை தேர்வுக்கான
முழுப்பயிற்சி பிப். 15-ம் தேதி முதல் நடக்கவுள்ளது.
இப்பயிற்சியில்
சேர 7397355517, 9952920001 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்
என சன் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் ஷரண் ராஜேந்திரன்
தெரிவித்துள்ளார்.
Post a Comment