சென்னை உயர்நீதி மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி - கடைசி நாள்: 22.2.2021. - EDUNTZ

Latest

Search here!

Thursday 18 February 2021

சென்னை உயர்நீதி மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி - கடைசி நாள்: 22.2.2021.

சென்னை உயர்நீதி மன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி - கடைசி நாள்: 22.2.2021.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி சென் சன்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வக்கீல் ஆபீசில் (அட்வகேட் ஜெனரல்) 16 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணிபுரியும் இடங்கள்: 

  • சென்னை, 
  • மதுரை. 

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி (முன்னாள் படை வீரர்களுக்கு இந்த கல்வித்தகுதி கட்டாயம் இல்லை). நான்கு சக்கர வாகன உரிமை பெற்ற விண்ணப்பதாரர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


வயது வரம்பு: 

1.7.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந் தவராக இருக்க வேண்டும். பொது வகுப்பினருக்கு 30க்கு மிகாமலும், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோ ருக்கு 32 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

இட ஒதுக்கீடு உள்ளிட்ட முழு விவரங்களையும் www.highcourt.nic.in, http://www.highcourt.nic.in என்ற இணை யதளம் மூலம் அறியலாம். அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ்/ கல்வி சான்றிதழ் / சாதி சான்றிதழ் / முன்னுரிமை தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

மாதிரி விண்ணப்பத்தை www.highcourt.nic.in என்ற இணை யதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 745 ஸ்டாம்புடன் கூடிய சுயமுகவரி யிட்ட உறையுடன், 

அரசு தலைமை வழக்குரைஞர், 
உயர்நீதிமன்றம், 
சென்னை-600 104 

என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்ற டைய கடைசி நாள்: 22.2.2021.
You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment