தர்மபுரியில் வரும் 28ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும், 28ல் நடக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக, தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வரும், 28 காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, 8ம் வகுப்பு முதல், பட்டம், பட்டய மற்றும் ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்ற, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ளும் வேலை அளிக்கும் நிறுவனங்கள், வேலை நாடுபவர்கள், நேரடியாகவோ அல்லது 'www.tnprivatejobs.tn.gov.in' என்ற இணையதள முகவரியில், ஆன்லைன் மூலமாகவோ கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, வெளிநாட்டு வேலை நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, வங்கிக்கடன் உதவிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 04342 296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment