பள்ளிகள், நூலகங்களுக்கு
2 திருக்குறள் புத்தகங்கள் வழங்கல்
திருவள்ளூர், பிப். 16:
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
அரசுப்பள்ளிகள் மற்றும் அங்குள்ள நூலகங்களுக்கு மாணவ, மாண
விகள் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கவும், வாசிப்புத் திறனை அதி
கரிக்கவும் தலா 2 திருக்குறள் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுத்
துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகளிலும் கட்டமைப்பு
வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்
வேறு வசதிகளை செய்து கொடுக்க பள்ளிக் கல்வித் துறை நடவ
டிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், பள்ளிகளில் நாள்தோறும்
நூல்கள் வாசிப்பதன் மூலம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள,
மாநில அளவில் மாவட்டந்தோறும் பள்ளிகளில் நூலகத் துறை மற்
றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து நூலகம் அமைக்கும்
திட்டம் மூலம் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நூலகம் மூலம் சிறு வயதிலேயே மாணவ, மாணவி
களின் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த முடியும். இதைக் கருத்தில்
கொண்டு பள்ளிகளில் நூலகம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக
எளிதாக வாசிக்கும் வகையில் கூடிய சிறுவர், சிறுமிகள் படிக்கும்
நூல்கள், சிறுகதை நூல்கள், நீதிக்கதை நூல்கள் உள்ளிட்ட ஓராயி
ரம் நூல்கள் பள்ளி நூலகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்
கன. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்
ளிகள் மற்றும் அங்கு செயல்படும் நூலகங்களுக்கு தலா 2 திருக்குறள்
புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Download Timer
ليست هناك تعليقات:
إرسال تعليق