மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி (தொகுப்பூதியம் 8000- 14000, கல்வித்தகுதி degree, 10th, 12th) - EDUNTZ

Latest

Search here!

Monday 22 February 2021

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி (தொகுப்பூதியம் 8000- 14000, கல்வித்தகுதி degree, 10th, 12th)

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணி  (தொகுப்பூதியம் 8000- 14000, கல்வித்தகுதி degree, 10th, 12th)


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி யாக உள்ள பணியிடங்களுக்கு, மார்ச் 2-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரி வித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: 

சம்பளம் வயது மற்றும் கல்வித்தகுதி

மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பணிக்கு (1), 40 வயதுக்குட்பட்ட பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். உளவியல் , சமூகப் பணி, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்து தல்பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தை சார்ந்த பணிகளில் இரண்டு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு, ரூ.14,000 தொகுப்பூதியம் வழங்கப் படும். 

இதே போல், புறத் தொடர்பாளர் பணிக்கும் (1), 40 வயதுக்குள் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குழந்தை சார்ந்த படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், குழந்தை சார்ந்த பணியில் ஒரு ஆண்டு அனுப வம் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபருக்கு ரூ.8,000 தொகுப்பூ தியம் வழங்கப்படும். 

இந்தப் பணியிடங்களுக்கு, குறிப்பிடப்பட்ட தகுதிகளையுடை யோர், 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு, 
எண்.8, 
சூரிய நாராயண சாலை, 
ராயபுரம், 
சென்னை 13 

என்ற முகவரிக்கு, மார்ச் 2-ஆம் தேதிக்குள் விண்ணப் பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 2595 2450 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You have to wait 25 seconds.

Download Timer

No comments:

Post a Comment