பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்
நல வாரியத்தில் காலியாக உள்ள 37 பதிவுரு எழுத்தர் பணியி
டங்களுக்கு, இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கும்,
வேலைவாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்
கும், பிப்.24 முதல் பிப்.27-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட
மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான அழைப்பாணை கடிதத்தை,
https://tnuwwb.tn.gov.in/ மற்றும் https://labour.tn.gov.in/
ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரரின் அடையாள
எண், ரகசிய குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, புதன்கி
முமை (பிப்.17) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் வாயிலா
கவும், செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக
வும் தெரிவிக்கப்படும்.
வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல
வாரியம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கு
அழைப்பாணை கடிதம் விண்ணப்பதாரரின் முகவரிக்கு
அனுப்பப்படும்.
அழைப்பாணை கடிதத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள
நாளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் மையத்துக்குச் சென்று
கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு கட்டுமானத்
தொழிலாளர்கள் நல வாரியச் செயலர் வெளியிட்ட செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Download Timer
No comments:
Post a Comment