தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே முதல் வாரத்தில் துவங்குவதால் ஏப்ரல் இறுதியில் தமிழக தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது அதற்குள் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. SOURCE NEWS
No comments:
Post a Comment