நேரடி முகவர்களாக அஞ்சல் துறையில் பணிபுரிய வாய்ப்பு (திருப்பூர்) - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 19 فبراير 2021

நேரடி முகவர்களாக அஞ்சல் துறையில் பணிபுரிய வாய்ப்பு (திருப்பூர்)

நேரடி முகவர்களாக அஞ்சல் துறையில் பணிபுரிய வாய்ப்பு 

திருப்பூர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், சுயதொழில் மற்றும்வேலை தேடும் இளைஞர்கள், 18 முதல் 50 வயதுடையவர்கள் அனைவரும் அஞ்சல் துறையின் சிறுசேமிப்பு திட்ட முகவராக தகுதியுடையவர்கள். 

10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் எனில் 65வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். இதற்கான நேர்காணல் திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது 

  • வயது சான்றிதழ், 
  • கல்வி சான்றிதழ், 
  • ஆதார் நகல் மற்றும் 
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், 
  • 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 
  • சுய விவரங்களுடன் பங்கேற்கலாம். 

சம்பளம் கிடையாது. பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You have to wait 25 seconds.

Download Timer

ليست هناك تعليقات:

إرسال تعليق