PG ECONOMICS- ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு. 






 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.6365/டபிள்யு 3/இ2/2019 நாள்.29.01.2021 பொருள் :- தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பொருளியல் பாட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 03.02.2021 அன்று நடைபெறுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு. பார்வை:- 1. அரசாணை (நிலை) எண்.720, கல்வித்துறை நாள் 28.04.1981. 2. அரசாணை (நிலை) எண். 534 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் (P&AR) துறை ,நாள்.10.19.1988. 3.அரசாணை(நிலை) எண்.65 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (எம்), நாள்.02.07.2014. 4. அரசாணை (நிலை) எண்.65 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (எம்), நாள்.02.07.2014. 5. அரசாணை (நிலை) எண்.144 பள்ளிக்கல்வி (பக2(1)த்துறை, நாள் 29.06.2017. 6.அரசாணை (நிலை) எண்.101 பள்ளிக் கல்வித் (பட்ஜெட்-1) துறை, நாள்.18.05.2018. 7.சென்னை-06, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலரின் கடித எண்.4235/இ3/2018, நாள்.29.01.2021. 2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பொருளியல்பாட முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல் பார்வை(7)ல் கண்ட ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 03.02.2021 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு நடைபெற ஏதுவாக கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பினை சிறப்பாக நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப� மாவட்டத்தை சார்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் முன்கூட்டியே தகவல் அனுப்பி சம்மந்தப்பட்ட பணிநாடுநர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, அசல் கல்விச்சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்கள் அதன் நகல்களுடன் தவறாது கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வேறு மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்கள் பட்டியலில் இருப்பின் அதன் விவரத்தினை அந்த சார்ந்த மாவட்டத்திற்கும், இணை இயக்குநர் (மேநிக) அவர்களுக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். 2. தேர்வர் பொருளியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அதற்குரிய கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ளாரா என்பதை அவருடைய கல்விச்சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை சரிபார்த்து அனைத்தும் சரியாக இருப்பின் அதன் பின்னரே கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். 3. பார்வை(6)ல் காண் அரசாணையின்படி (a) A diploma obtained after completion of S.S.L.Cor Higher Secondary (10+3(3 years Diploma)or (10+2+2)(Lateral Entry) (b) A degree obtainedafter completion of S.S.L.Cand Higher Secondary (10+2+3 or more)-60 தனியர்களுடைய கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும். 4. பார்வை(2)ல் காண் அரசாணையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பத்தாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 35% மதிப்பெண் பெற்றால் மட்டுமே தமிழ்நாடு அரசு வேலைக்கு தகுதியானவர் என்பதால் இந்த அரசாணையின்படி தனியரது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். 5. தனியர் ஒரே ஆண்டில் இருவேறு பட்டங்கள் (Simultaneous Degree)இரட்டைப்பட்டங்கள் (Double Degree) பெற்றிருத்தல் கூடாது. 6. ஏற்கனவே EMIS இணையதளம் மூலம் நடைபெற்ற பணிநியமன கலந்தாய்வில் கடைபிடிக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் தவறாது பின்பற்றி கலந்தாய்வினை எவ்விதப் புகாருக்கும் இடமின்றி நடத்த இருப்பின் நியமன ஆணை வழங்காமல் நிறுத்தி வைத்து அவ்விவரத்தினை பள்ளிக் கல்வி இணை இயக்குநர்(மேல்நிலைக்கல்வி) அவர்களுக்கு தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். 8. தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் தலைப்பெழுத்தில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உரிய ஆவணங்களுடன் ஒப்பிட்டுத் திருத்தம் முதன்மைக்கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். 9. தெரிவு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிதல் மற்றும் மறு மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை விதிமுறைகளுக்கு உட்பட்டு தாங்களே உரிய அலுவலர்களால் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. 10. இப்பட்டியல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்களின் அடிப்படையிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பணி நாடுநர்கள் தொடர்பான சான்றிதழ்களின் நகலினை நன்கு பரிசீலித்து அவர்கள் பணி நியமனத்திற்குரிய தகுதியினை பெற்றுள்ளனரா என்பதனை உறுதிபடுத்திய பின்னரே பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், தகுதியற்ற பணி நாடுநர்கள் எவரேனும் தற்காலிக தெரிவு பட்டியலில் இடம் பெற்றிருப்பின் அவர்களது தற்காலிக தெரிவினை ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிய அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகுதியற்ற நபருக்கு பணிநியமனம் வழங்கப்படின் அதற்கு சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 11. பணியிட ஒதுக்கீடு செய்வதற்கான முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள வரிசை எண்ணின் அடிப்படையில் பணியிட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படும். 12.மேலும், தேர்வர்கள் சான்றிதழ� சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அற்றது என கண்டறியப்படும் நேர்வுகளின் விவரங்களை தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைத்திடவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 13. பணி நியமன ஆணை பெற்றவர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பணியில் சேரவில்லையெனில் உரிய விதிமுறைகளின்படி அவர்களது பணிநியமன ஆணையை இரத்து செய்ய காரணம் கேட்கும் குறிப்பாணையினை அனுப்பி அதன் பின்னரும் அவர்கள் பணியில் சேரவில்லை. எனில், அவர்களது நியமனத்தினை இரத்து செய்து அதன் விவரத்தையும் மற்றும் பணியில் சேராதவர்களின் பட்டியலையும் இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. 14. பார்வை 6-ல் காணும் அரசாணையின்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன அலுவலர்கள் என்பதால் தற்காலிகமாகத்தெரிவு செய்யப்பட்ட தேர்வரின் சுயவிவரங்கள் மின்னஞ்சல் வாயிலாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பணிநாடுநர்களின் சொந்த மாவட்டங்களில் பணியிடம் காலியாக இல்லையெனில் பணியிட ஒதுக்கீட்டு ஆணையில் கலம்-4ல் குறிப்பிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உரிய பணி நியமனம் வழங்க ஏதுவாக தனியரின் சுயவிவரங்கள் அனுப்பி வைக்க சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தப்படுகிறார். 15. இதனடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கை எண்.10/2019ல் தெரிவிக்கப்பட்டுள்ள முறையில் உரிய கல்வித் தகுதிகளை பணிநாடுநர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்து பணிநியமன ஆணை வழங்கப்படும் முன்னர் அசல் சான்றிழ்களை மீளவும் ஒருமுறை சரிபார்த்திடவும், தமிழ்வழி இட ஒதுக்கீடு, மாற்றத்திறனாளி இள ஒதுக்கீட 16. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின் பிரிவு 4(b)ல் கல்விக்கான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு “All qualifying I equivalent certificates should have been obtained prior to the last date for submission of filled in online application" உரிய சான்றுகள் பெறப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதிபடுத்திட தெரிவிக்கப்படுகிறது. 17. 03.02.2021 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ள முதுகலை பொருளியல் பாட பணியிடத்திற்கான நியமன கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏதுவாக தங்கள் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்களுக்கு உரிய தகவலை அனுப்பி வைக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ள தேர்வர் எவரேனும் கலந்தாய்வு நடைபெறும் விவரம் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்தால், அது தொடர்பாக சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு-பணிநாடுநர்களின் பெயர்பட்டியல். பள்ளிக்கல்வி எங்கள் இதைத \ol>{ | 

பெறுநர் 
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள். Eg/n/aual 

நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக்ககல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-09. (தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது)

Post a Comment

Previous Post Next Post

Search here!