மின்னஞ்சலில் 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை-06 
ந.க. எண். 46150/04/81/2020, நாள். 23.04.2021. 

பொருள்: 

பாகம்-1 தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோரியது - கூடுதல் விவரங்கள் கோருவது - தொடர்பாக. 

அரசுக் கடிதம் எண்.6540/154(2)/2021-2, நாள்.20:04.2021 2. சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் ந.க.எண்.46150/அ4/81/2020,நாள்.24.03.2021. 



பார்வை 2ல் காணும் கடிதத்துடன் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / தட்டச்சர்களுக்கு கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்றமைக்கு, முன் ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக பார்வை 1ல் காணும் அரசுக் கடிதத்தில் கீழ்க்காணும் கூடுதல் விவரங்கள் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தனியர்கள் கணக்குத் தேர்வு பாகம்-1 எழுதியதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், தேர்ச்சி பெற்றதற்கான அரசிதழ் அறிக்கையின் நகல்கள் (TNPSCBulletin Copy) மற்றும் அப்பணியாளர்கள் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1ல் தேர்ச்சி பெற்ற விவரங்கள் பதியப்பட்ட பணிப்பதிவேட்டின் நகல்கள். 

எனவே, மேற்காணும் விவரங்களை அனைத்து பணியாளர்களிடமிருந்து பெற்று அரசுக்கு அனுப்பும் பொருட்டு இரு நகல்களில் 30.04.2021க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


Post a Comment

Previous Post Next Post

Search here!