தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக, 512 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், 1 கிராம், 4,447 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 576 ரூபாய்க்கும் விற்பனையாகின. 


ஒரு கிராம் வெள்ளி, 73.50 ரூபாய்க்கு விற்கப் பட்டது.நேற்று, தங்கம் கிராமுக்கு, 64 ரூபாய் உயர்ந்து, 4,511 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 512 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 88 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. இதையடுத்து, சவரன் விலை, மீண்டும், 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.வெள்ளி கிராமுக்கு, 60 காசு உயர்ந்து, 74.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Search here!