கூட்டுறவுத்துறை : பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தவது தொடர்பாக பதிவாளரின் கடிதம் - EDUNTZ

Latest

Search here!

Thursday 13 May 2021

கூட்டுறவுத்துறை : பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தவது தொடர்பாக பதிவாளரின் கடிதம்

கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 59 லிருந்து 60 ஆக உயர்த்தவது தொடர்பாக பதிவாளரின் கடிதம்


பார்வை(1) இல் காணும் அரசாணையின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59 ஆக உயர்த்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது, பார்வை (3) இல் காணும் அரசாணையில் (நகல் இணைக்கப்பட்டுள்ளது), தமிழ்நாடு அரசுப்பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59 லிருந்து 60 ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59 லிருந்து 60 ஆக உயர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இக்கடிதம் பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை உடன் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

                                ஒம்!.--இல. சுப்பிரமணியன், 
                கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழுக் கூடுதல் பொறுப்பு) 


No comments:

Post a Comment