அரசுப் பள்ளிகளை தொடர்ந்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


பிளஸ் 2 தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு, மாணவர்களும் பள்ளிக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் பேரில் அரசும் அனுமதி அளித்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்று அரசு அறிவித்தது. 


 ஆனால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. இதையடுத்து, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் மே 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளார். இதையடுத்து, இன்று முதல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியதில்லை.

Post a Comment

Previous Post Next Post

Search here!