என்ஜினீயரிங் படிப்புக்கான கடந்த ஆண்டு (2020) நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளை கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த தேர்வு முடிவு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. முதலாம் ஆண்டு மற்றும் அரியர் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவு வெளியானது.
அதில், பல்வேறு முறைகேடுகள், பிரச்சினைகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் இருந்து புகார் வந்தன.
இதையடுத்து அந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்றும், ஏற்கனவே நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் விரும்பினால் அந்த தேர்வில் பங்கேற்கலாம் என்றும் அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்களுடன், சிறப்பு பிரிவு (ஸ்பெஷல் கேஸ்) மாணவர்கள் என்று கூறப்படும் அரியர் மாணவர்களும் தேர்வை எழுதினார்கள்.
அதன்படி அவர்களுக்கான தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment