ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 17 مايو 2021

ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவ காசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், எழுத்தர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி யிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 


இதற்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், அதற்கு மே 17 (இன்று) வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என் றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பதா ரர்களின் வேண்டுகோளை ஏற்று, இதற்கான அவகாசம் மே 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. www.sbi.co.in/careers இணைய தளம் மூலம் மே 20 வரை ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம். 

எழுத்தர் பணிக்கான தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது பட்டப் படிப்பு இறுதி யாண்டு படிக்கும் மாணவர்க ளும், விண்ணப்பிக்க தகுதியுடைய வர்கள். வயது வரம்பு பொதுப்பிரி வினருக்கு 28, ஓபிசி பிரிவினருக்கு 31, எஸ்சி, எஸ்டிவகுப்பினருக்கு 33, மாற்றுத் திறனாளிகளுக்கு 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோ ருக்கு ஜுலை 31-ம் தேதி இணைய வழியில் முதன்மைத் தேர்வு நடத் தப்படும்.



هناك تعليقان (2):

  1. I wanted job to work
    My date of birth 30.09.1981
    Please provide me a work
    I know TALLY 9 ERP WITH COMPUTER KNOWLEDGE

    ردحذف
  2. PLEASE READ THAT MESSAGE AGAIN

    ردحذف