குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா? - EDUNTZ

Latest

Search here!

Sunday 23 May 2021

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

இப்போதெல்லாம் 'என்ன குழந்தை பிறந்துள்ளது?' என்பதற்கு அடுத்த கேள்வியாக 'குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது?' என்று தான் பலரும் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு நிறத்தின் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. 

நிறம் பற்றிய கேள்வி வரும் போதுதான் 'சிவப்பு தங்கம்' என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என நம்பப்படுகிறது. இது உண்மையா? ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலைத் னமும் குடிக்க வேண்டும் என்பதுதான். அப்படிக் குடித்தால்தான் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். 

சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மை யில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதற்கு மருத்துவர்களின் பதில் 'நோ' என்பதே. உண்மையில் குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப் பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனின் சுரப்பி யும்தான். சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த மெலனின் தான். 

யாருக்கு உடலில் மெலனின் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்குக் கறுப்பாகவும், மெலனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்குச் சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர். ஆகவே, நிறத்திற்கும் குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு சம்பந்தம் இல்லை என்பதே உண்மை. ஆனால், கர்ப்பிணிகளுக்குப் பல வகை களில், இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியில் உதவி யாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால், அதன் மணமும் சுவையும் வாந்தி  எடுக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. 

மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடத் தொடங்க லாம். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகவும் இது உள்ளது. குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே, கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை. குங்குமப்பூவுக்கும் குழந்தையின் நிறத்துக்கும்தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மை கள் அடங்கியுள்ளன. 

நன்மைகள்: 

* செரிமான தன்மையை அதிகரிக்கச் செய்யும். சருமத்தின் பொலிவு கூடும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். 

* நோய் எதிர்ப்பு சக்தி கூடும். * இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். மூட்டுகள் பலமாகும். புற்றுநோயைத் தடுக்கும்.

 * சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல் குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரை யின்படி உட்கொள்வதே சிறந்தது.


No comments:

Post a Comment