கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான செயல்கள், அகிம்சை முறை மற்றும் இதர காந்திய வழிமுறைகளில் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும், சமூக நீதிக்காகவும், நல்லினத்திற்காகவும் பாடுபட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டில் காந்தி அமைதி பரிசு வழங்கப்பட உள்ளது.
இதனால் காந்தி அமைதி பரிசு பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் புத்தகம் வெளியிட்டு இருப்பவர்களும், பரிசு பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
MUST READ தமிழக அமைச்சரவை இலாகா விவரம்
அதனால் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், கடலூர் என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்று தங்கள் "கருத்துருகளை" வருகிற 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment