ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 26 May 2021

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விருப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். 

விருப்பமுள்ளவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை புதன்கிழமை (இன்று) இரவு 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையதளத்திலும், செவிலியர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். 115 மருத்துவர் பணியிடங்களுக்கும், 189 செவிலியர்கள் பணியிடங்களுக்கும் விருப்பம் மற்றும் கல்வித்தகுதியுடைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை (வியாழக்கிழமை) சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகை கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் 
நேர்காணலில் கலந்து கொள்ளலாம். புதன்கிழமை விண்ணப்பிக்க தவறியவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்துக்கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற 28-ம் தேதி பணியில் சேர வேண்டும்.

No comments:

Post a Comment