தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பு ஏற்றது. இந்தநிலையில் தமிழக அரசின் தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டார். கோவி.செழியன் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். தி.மு.க. சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று கருத்துகளை முன்வைத்து வந்தவர்.
إرسال تعليق