‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கம் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் 


தமிழகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீசை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய துறை உருவாக்கம் இதுகுறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- 


 முதல்-அமைச்சர் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் ஆய்வு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறை, தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது. சிறப்பு அலுவலர் ஷில்பா மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். 


இவர் முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் பணியாற்றுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், நெல்லை மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Search here!