தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 344 ரூபாய் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,453 ரூபாய்க்கும்; சவரன், 35 ஆயிரத்து, 624 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 74.90 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 43 ரூபாய் உயர்ந்து, 4,496 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 344 ரூபாய் அதிகரித்து, 35 ஆயிரத்து, 968 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 1.20 ரூபாய் உயர்ந்து, 76.10 ரூபாய்க்கு விற்பனையானது.

Post a Comment

Previous Post Next Post

Search here!