மதுரை ரயில்வே மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். 


இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''மதுரை ரயில்வே மருத்துவமனை கரோனா நோய் சிகிச்சைப் பிரிவுக்கு 15 மருத்துவர்கள், 28 மருத்துவ உதவியாளர்கள், 12 சுகாதாரப் பணியாளர்கள், 2 மருத்துவப் பரிசோதனை மைய தொழில்நுட்ப அலுவலர்கள், 2 ரேடியோகிராபிகள், 2 மருந்தாளுநர்கள் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நவம்பர் 3 வரை அல்லது தேவைப்படும் காலம் வரை நீட்டிப்பு செய்யப்படலாம். 


விண்ணப்பதாரர்களுக்குத் தொலைபேசி வாயிலாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசித் தேதி மே 10, 2021. அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும் தேவைக்கு ஏற்பப் பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 80561-62611, 80561-62613 என்ற அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.''. இவ்வாறு ரயில்வே மருத்துவ நிர்வாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!