கரோனா பரவலால் முதுநிலை ஆயுஷ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 


சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறைகளில் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய அளவில் முதுநிலை ஆயுஷ் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2021-22-ம் கல்வியாண்டுக்கான முதுநிலை ஆயுஷ் நுழைவுத்தேர்வு ஜூன் 7-ம் தேதி நடைபெறுநேவம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 


தற்போது கரோனா பரவலால் ஆயுஷ் நுழைவுத் தேர்வு 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இதற்கான மாற்று தேதிகள் மற்றும் இணையதள விண்ணப்பப் பதிவு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். 

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதுநிலை நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

Search here!