உங்க Withdrawl Form மூலமா மற்றவங்க பணம் எடுக்க முடியாது: எஸ்பிஐ புதிய விதிகள் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

الاثنين، 31 مايو 2021

உங்க Withdrawl Form மூலமா மற்றவங்க பணம் எடுக்க முடியாது: எஸ்பிஐ புதிய விதிகள் அறிவிப்பு

காசோலை பயன்படுத்தி மூன்றாம் தரப்பினர் பணம் எடுப்பதற்கு கே.ஒய்.சி. தேவைப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. 

கோவிட் -19 தொற்றுநோய்களின் போது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், எஸ்.பி.ஐ வங்கி காசோலை மற்றும் திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non – home cash திரும்பப் பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது. 

மே 29ம் தேதி இது தொடர்பாக தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ட்வீட் ஒன்றும் மூலம் தகவல் அளித்துள்ளது. அதில் இந்த தொற்றுநோய்களில் எங்கள் வாடிக்கையாளர்களை ஆதரிப்பதற்காக, எஸ்பிஐ காசோலை மற்றும் திரும்பப் பெறுதல் படிவத்தின் மூலம் non-home cash-ஐ திரும்பப் பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது இந்த புதிய வரம்புகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்த எஸ்.பி.ஐ., தங்களின் வாடிக்கையாளர்கள் third party-களுக்கு வித்ட்ராவல் படிவங்களின் மூலம் பணம் அனுப்ப முடியாது என்றும் கூறியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق