தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?: முழு ஊரடங்கு முடிந்தபின் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 1 June 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?: முழு ஊரடங்கு முடிந்தபின் அறிவிப்பு

தளர்வில்லா முழு ஊரடங்கிற்குப் பிறகு பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பள்ளிகள் திறந்தவுடன் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும், இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும், தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்துள்ளார். தலைமையாசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது என்றும், எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment