பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அறிக்கையளிக்க உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 1 يونيو 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அறிக்கையளிக்க உத்தரவு

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்?: 


நீதிமன்றம் கேள்வி கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு எப்படி நலத்திட்டங்களை செயல்படுத்தப்போகிறது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அவர்களுக்குத் நலத் திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றில் ஏராளான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களுக்கு தமிழகம், கேரளம் போன்ற மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை அறிவித்தது. 

இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு எப்படி நலத்திட்டங்களை செயல்படுத்தப்போகிறது என்று கேள்வி எழுப்பியது. மேலும், அவர்களுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق