பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட திட்டம்
:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை, இன்னும் ஒரு வாரத்தில் வழங்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கொரோனா பரவல் பிரச்னையால், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, பல்வேறு மதிப்பெண் திட்டங்களை வகுத்து, முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பித்தது. அதில் ஒரு திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். அதன்படி, 10ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம்; பிளஸ் 1ல் இருந்து, 20 சதவீதம் மற்றும், பிளஸ் 2 செய்முறை தேர்வில் இருந்து 30 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வின் மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு தேர்வு துறையில் மதிப்பெண் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.ஆக., 1 முதல் கல்லுாரி மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.
ஜூலை 31க்குள் மதிப்பெண் பட்டியலை வழங்க, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு வாரம் அல்லது ௧௦ நாட்களுக்குள், பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, பள்ளி கல்வித்துறை வெளியிடும் என தெரிகிறது.
Search here!
Saturday 10 July 2021
New
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட திட்டம்
About Admin
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Public Exam
Tags
Public Exam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment