கலெக்டரிடம் சென்று கலெக்டர் ஆவேன் என கூறிய சிறுவன் நூலக நிரந்தர உறுப்பினர் ஆனான் - EDUNTZ

Latest

Search here!

Sunday 4 July 2021

கலெக்டரிடம் சென்று கலெக்டர் ஆவேன் என கூறிய சிறுவன் நூலக நிரந்தர உறுப்பினர் ஆனான்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகத்தை அவர் பார்வையிட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுவன் கலெக்டரை பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தான். 


பின்னர் அந்த சிறுவன், என் பெயர் ரோகித் சர்மா என்றும், குருஞான இந்து மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருவதாகவும், நானும் உங்களை போல கலெக்டர் ஆக விரும்புகிறேன் என்றும் கூறினான். இதையடுத்து அந்த சிறுவனிடம் பேசிய கலெக்டர் மேகநாத ரெட்டி, நன்றாக படிக்க வேண்டும் எனவும், உன்னுடைய லட்சிய இலக்ைக அடைய அயராது பாடுபட வேண்டும் என உற்சாகப்படுத்தியதுடன், அந்த சிறுவனுக்கு ஒரு புத்தகத்தை வழங்கினார். 


அத்துடன் நீ அனைத்து நூல்களையும் எடுத்து படிக்கும் வகையில் இந்த நூலகத்தில் நீ உறுப்பினராக வேண்டும் என கூறிய கலெக்டர், தனது பையில் இருந்து ரூ.500 எடுத்துக்கொடுத்து, அந்த நூலகத்தில் அந்த சிறுவனை நிரந்தர உறுப்பினர் ஆக்கினார். கலெக்டரிடம் சென்று நானும் கலெக்டர் ஆவேன் எனக்கூறிய சிறுவனையும், அவனது படிப்புக்காக நூலக நிரந்த உறுப்பினர் ஆக்கிய கலெக்டர் மேகநாதரெட்டியையும் பொதுமக்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment