சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (ஜூன்) சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர் சினே ராணா, இங்கிலாந்து பெண்கள் அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரையும், சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிவோன் கான்வே, வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோரையும் ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.
17 வயதான ஷபாலி வர்மா சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இருந்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள், ஒளிபரப்புதாரர்கள் உள்ளிட்ட ஐ.சி.சி.வாக்கு அகாடமியினர் வாக்களித்து தலா ஒரு வீரர், வீராங்கனையை விருதுக்கு தேர்வு செய்து அறிவிப்பார்கள்.
Search here!
Thursday 8 July 2021
New
ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனை விருதுக்கு ஷபாலி வர்மா பெயர் பரிந்துரை
About Admin
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Cricket News
Tags
Cricket News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment