அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை - EDUNTZ

Latest

Search here!

Friday 9 July 2021

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கலந்தாய்வு மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021-ம் ஆண்டுக்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்ய வருகிற 28-ந் தேதி கடைசி நாள் ஆகும். பெற்றோருக்கு அறிவுரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பித்தல் தொடர்பான உரிய அறிவுரைகளை வழங்கவும், பதிவேற்றம் செய்யவும் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு முதல்வர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்தூர்பேட்டை, தொலைபேசி எண்- 04149-222339, 9080187127, தனி அலுவலர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம், தொலைபேசி எண்- 04151-235258, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம் தொலைபேசி எண்- 9380114610) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment