ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள் - EDUNTZ

Latest

Search here!

Thursday 1 July 2021

ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள்

 ஜாக்டோஜியோ போராட்ட நடவடிக்கை ரத்து.- பள்ளி கல்வி ஆணையரின் செயமுறைகள் 



தமிழ்நாடுபள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை
ந.க.எண்.028761/93/இ1/2021, நாள் 06.2021

பொருள்

பள்ளிக்கல்வி -22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற
வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள்
மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள்
கைவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டமை தொடர்
நடவடிக்கை மேற்கொள்ளல் தொடர்பாக.

1) அரசாணை (நிலை) எண்.9, பணியாளர் மற்றும் நிருவாகச்
சீர்திருத்தத்துறை, நாள் 2.2.2021
2) சென்னை-6, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.0018/01/31/2021, நாள். 10.02.2021.

பார்வை
22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது
தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், தண்டனை வழங்கிஇருப்பின் அவற்றை இரத்து செய்தும் அரசாணை(நிலை) எண் 9, பணியாளர்மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்(கே) துறை நாள் 02.02.2021 வெளியிடப்பட்டது.

மேற்கண்ட 1 அரசாணை தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும்அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பார்வை (2)ன்படி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சார்ந்த அரசாணையின் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாதபணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டும், ஒழுங்குநடவடிக்கையில் தண்டனை வழங்கி இருப்பின் அவற்றை இரத்து செய்தும் ஆணை வழங்கிய விவரங்கள் கோரப்பட்ட போது ஒருசில மாவட்டங்களில் உரிய
நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது தெரிய வருகிறது. அதன் காரணமாக அரசாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.




No comments:

Post a Comment