கொரோனா நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் 15-9-2021 வரை நீட்டிப்பு - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 


தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (30-8-2021) தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டைமாநிலங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தொற்றின் உயர்வு . நோய்த்தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. 

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 28-8-2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை 30-9-2021- வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. PDF ATTACHED

Post a Comment

Previous Post Next Post

Search here!