சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது 

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் வாயிலாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முன்னுரிமை அளிக்கிறது ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு 367 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் 723 நிலை ஒன்று முதுநிலை கணினி பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் பல்வேறு பாடங்களில் 492 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக 2020 21 ஆம் கல்வி ஆண்டில் நிரப்பப்பட்டுள்ளது மேலும் 2098 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்


Post a Comment

Previous Post Next Post

Search here!