திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவம் னைகளில் தற்காலிகப் பணியிடங் களில் பணிபுரிய விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண் ணப்பிக்கலாம் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள் ளார். 


இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட மருத்து வம் மற்றும் ஊரக நலப்பணிகள் இடை இணை இயக்குநர் கட்டுப்பாட் டில் இயங்கும் அரசு மருத்துவம் னைகளில் மருந்தாளுநர், ஆய்வுக் கூட நுட்புநர், நுண்கதிர் வீச்சாளர் கள் மற்றும் கரோனா கட்டுப்பாடு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 6 மாதங்களுக்கு மட்டும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அதன்படி, மருந்தாளுநர்-6, ஆய் வக நுட்புநர்-6, நுண்கதிர் வீச்சா ளர்-6பேர் சேர்க்கப்படவுள்ளனர். 

தகுதியானோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமா கவோ இணை இயக்குநர் (மருத்து வம் மற்றும் நலப் பணிகள்) , திரு வள்ளூர் என்ற முகவரியில் சமர்ப் பித்து பயன்பெறலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!