பத்தாம் வகுப்பு, பிளஸ்1 தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத, ஆன்லைன் வழியாக தட்கல் முறையில் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
உயர்கல்வியில் சேர, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, சான்றிதழ் வினியோகிக்கப்பட்டது. பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கு, கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு துவங்கியது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு, தற்போது விண்ணப்ப பதிவு நடக்கிறது.
இன்று மாலை வரை (ஆக.,11ம் ) அந்தந்த கல்வி மாவட்ட நோடல் மையங்களில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.நாளை முதல், கூடுதல் கட்டணத்துடன், 'தட்கல்' முறையில் விண்ணப்ப பதிவு துவங்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ليست هناك تعليقات:
إرسال تعليق