தனித்தேர்வர்களுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம் - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 11 أغسطس 2021

தனித்தேர்வர்களுக்கான ஆன்லைன் பதிவு துவக்கம்


பத்தாம் வகுப்பு, பிளஸ்1 தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத, ஆன்லைன் வழியாக தட்கல் முறையில் விண்ணப்ப பதிவு, நாளை துவங்குகிறது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. 

உயர்கல்வியில் சேர, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, சான்றிதழ் வினியோகிக்கப்பட்டது. பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கு, கடந்த 6ம் தேதி பொதுத்தேர்வு துவங்கியது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தனித்தேர்வர்களுக்கு, தற்போது விண்ணப்ப பதிவு நடக்கிறது. 

இன்று மாலை வரை (ஆக.,11ம் ) அந்தந்த கல்வி மாவட்ட நோடல் மையங்களில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.நாளை முதல், கூடுதல் கட்டணத்துடன், 'தட்கல்' முறையில் விண்ணப்ப பதிவு துவங்கும். விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

Comments System

[blogger][disqus][facebook]