தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search here!

الأربعاء، 11 أغسطس 2021

தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் வழங்கப்படும் தூய தமிழ்ப் பற்றா ளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 

நடைமுறை வாழ்வில் இயல்பாகவே தூய தமிழைப் பயன்படுத்தும் தகுதி வாய்ந்த வர்களிலிருந்து மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தூய தமிழ்ப் பற்றா ளர் விருது, தலா ரூ.20,000 பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் ஆகி யவை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளன. 

விருதினைப் பெறுவதற்கு விருப்பமுள்ள, தகுதி வாய்ந்த தூயதமிழ்ப் பற்றாளர்கள் சொற்குவை.காம் (sorkuvai.com) என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, நிரப்பி, patralarvirudhu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600028 என்ற இயக்கக முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ வரும் ஆக.31-ஆம் தேதிக் குள் அனுப்பிவைக்கவேண்டும். 

விண்ணப்பத்துடன், தங்கள் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோரில் யாரேனும் இருவரிடம் தங் களது தூயதமிழ்ப்பற்றை உறுதிசெய்யும் வகையில் நற்சான்றிதழ்களை யும் பெற்று இணைத்து அனுப்ப வேண்டும். 


ليست هناك تعليقات:

إرسال تعليق