எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்ற தாய் - மகன் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 11 August 2021

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்ற தாய் - மகன்

குடகில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஒரே நேரத்தில் எழுதி தாயும், மகனும் தேர்ச்சி பெற்ற சம்பவம் நடந்துள்ளது. 


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை உச்சம் தொட்டதை தொடர்ந்து பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை அறிய அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு கடந்த மாதம்(ஜூலை) 19 மற்றும் 22-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 

 இதில் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா கோணிகொப்பா அருகே உள்ள கைகேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனும், அவனது தாயும் ஒன்றாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:- தாய் - மகன் கைகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி குசுமாவதி. 

இவர்களது மகன் கவுதம். இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இந்த நிலையில் இவரது தாய் குசுமாவதியும் தனித்தேர்வராக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார். அவர் திருமணத்திற்கு பிறகு தனதுபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி இருந்துள்ளார். அதாவது 9-ம் வகுப்பு வரை படித்த அவர் எஸ்.எஸ்.எல்.சி. படிக்காமல் குடும்ப வறுமை காரணமாக காபித்தோட்டங்களில் வேலை செய்து வந்துள்ளார். 

 அதன்பிறகு சந்திரசேகரை திருமணம் செய்து கொண்ட அவர் தொடர்ந்து வேலை செய்து வந்தார். அவருக்கு கவுதமும் பிறந்து அவனும் படித்து வந்துள்ளான். இந்த நிலையில் படிப்பில் ஆர்வம் கொண்ட குசுமாவதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சி செய்தார். இதற்கு முன்பு 6 முறை அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தனித்தேர்வராக எழுதி உள்ளார். 

அந்த 6 முறையும் அவர் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார். இருவரும் தேர்ச்சி இந்த நிலையில் அவரது மகன் கவுதமும் 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கவுதமும், குசுமாவதியும் எழுதினர். இதில் குசுமாவதி தனித்தேர்வராக தேர்வை எழுதினார். 

இந்த தேர்வில் கவுதமும், குசுமாவதியும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தாயும், மகனும் ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்ற விஷயம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் குசுமாவதி 625-க்கு 267 மதிப்பெண்களும், கவுதம் 294 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment